search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ் பீரங்கி"

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை பெற்ற ‘தனுஷ்’ பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #Dhanush #ArtilleryGun
    ஜபல்பூர்:

    மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எப்.டி.) இயக்குனர் சவுரவ் குமார் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

    ராணுவ தேவைக்காக 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியுள்ளன. அதில் முதல் கட்டமாக 6 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை ‘தனுஷ்’ ரக பீரங்கிகள் பெற்றுள்ளன. இந்த பீரங்கிகள் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. 
    முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கியை இறுதிக்கட்டமாக பரிசோதித்து பார்த்ததில் வெற்றிகரமாக அமைந்தது.
    புதுடெல்லி:

    முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது.

    155 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த பீரங்கி, 38 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும். இது, போபர்ஸ் பீரங்கி தாக்கும் தூரத்தை விட 11 கி.மீ. அதிகம் ஆகும். ‘உள்நாட்டு போபர்ஸ்’ என்றும் ‘தனுஷ்’ அழைக்கப்படுகிறது.

    குளிர் பிரதேசமான சிக்கிம், லே, வெயில் பிரதேசமான ஒடிசா மாநிலத்தின் பலசோர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்ட தனுஷ் பீரங்கி, பாலைவன பிரதேசமான பொக்ரானில் இறுதியாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுவும் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, தனுஷ் பீரங்கியை இந்திய ராணுவத்தில் சேர்க்க வழி பிறந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 12 தனுஷ் பீரங்கிகள், ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன.
    ×